நன்றி......

வணக்கம்.என் தளத்திற்க்கு வருகை தந்தமைக்கு நன்றிகள்.கருத்திடுக.....

வியாழன், 6 ஜூன், 2013

மூளைத் தொழில்

மூளைத் தொழில்


கூறெனப் பாய்ந்து
வானத்தில் ஏறும் வல்லூறுகளின் பார்வையில்
பூமி சிறிதானது.

பெய்த சிறுநீர்  பகீரதன்
வரவழைத்த புனித நதியெனப்
 பிரவாகமெடுக்கின்றன.

பிடரி சிலிர்த்த குதிரைகள்
கோவேறு கழுதையாய் மாறி
தொண்டை கணைத்துப் பேப்பர் தேடி ஓய்ந்தது.
கம்பெடுத்தவன் தண்டல்காரன்.

திசையெங்கும் அவள்
அரிதாரம்.
கற்றவை மறந்து தேடி அலைகிறாள்
சிவப்புத் தாமரை சரஸ்வதி.
படிச்சிப் படிச்சி நீர்த்தாள்.
சிவப்புப்புழுக்கள் உண்டு நெளியும்
மூளைக்காரனிடம்.

கடலுக்குள் நிசப்தமென
அறிவுலகம் துகில் கொள்கிறது.
         
               பாரதிசந்திரன்   திரு நின்றவூர்.

பிச்சைத் தாய்

பிச்சைத் தாய்

கோயில் வாசலில் கேட்ட 
வித வித பிச்சை ஒலிகள் 
நெஞ்சை கழற்றித் தூரப்போட்டன .
தோள் சுருங்கிய தாயின் குரல் 
உள் நுழைந்து 
பின்புலப் படமுடன் கதை விரிந்தன .
எச்சூழ்நிலை தள்ளியது அவளை .

எல்லாம் வல்ல தான் தோன்றி அவன் 
வாசலை ஏன் வறுமையின் 
சின்னமாக்கினான் .

சாலைகளின் நடுவில்,பேருந்து  நிறுத்தத்தில்,
தொடர் வண்டிக்குள் பூங்காவில் இப்படியாய் 
தாயை நிறுத்திய 
எவனோ ,எவளோ-
 தாய்ப்பால் குடித்த அவர்களின் 
வாயை வெட்டிப் பிய்த்தாலென்ன ?

தலை மேல் கை வை 
வாழும் என் வாழ்வென 
கைதட்டி வரும் மாதொரு பாகருக்குப் 
பத்தோ ,ஐம்பதோ 
தரும் தருமர்களே 
பிச்சைத் தாய் வருவது 
மறைந்து போனது ஏனோ ?

பள்ளியில் பணம் கட்டிப் படிக்க வைத்தத் 
தோஷம் போக்க 
முதிர்ந்த பொழுது பணம் கட்டி
அனுப்பி வைத்தாயோ 
முதியோர் இல்லத்திற்கு ?
அவளும் பிச்சைத் தாய் தானோ?

தாய்க்குத் திவசம் 
ஒலி வசியம் செய்தவருக்கு 
தடித்த பணம்  தட்டில் வைத்தாய்.
வயிறு பிழிந்த பசியோடு நின்ற 
பிச்சைத் தாயைப் 
பிண்ட சோறு பொறுக்க விட்டாய் .

சுற்றுப்புறக் கல்வி

வீட்டுக்குள் ஏசி போட்டாச்சு 
ஓசோனுக்குள் ஊசி குத்தியாச்சு

காதைப் பிளக்கும்-சத்தம்-அது
சாகும்பறை கொட்டும் நித்தம்

மரம் வளர்த்தால் மழை 
அதைத் 
தினம் மறந்தால் பிழை

பணப்பை
நிரப்ப கலக்கின்றோம்
நீரில் சாயம் .
வாய்க்கு நீரின்றித் தவிக்கின்றோம் 
வாழ்வு மாயம் .

காடழித்து நாடாகுமோ
கண்ணழித்து சுகமாகுமோ


வீட்டுக்கொரு மரம் வளர்த்தால் 
வீறு கொண்டு மழை பிறக்கும்

வெப்பச் சலனம் தடுத்திடுவோம் 
வெற்றிடங்கள் யாவும் மரம் வளர்த்திட்டால்

மரத்தை வளர்ப்போம் மகத்துவத்தை 
மனிதத்தைக் காப்போம்

ஏசி காற்றை விட 
ஓசிக் காற்று உயர்ந்தது .

குருவாய் ஆனவர்

குருவாய் ஆனவர்
--------------------------------
மேடும் பள்ளமுமான 
கிராமத்தில் 
சரித்திரங்கள்  உலவும் 
பழைய வீடு.
வயல்வெளியும் ,சுய தொழிலும் நசுங்கத் 
தேடித் தேடிச்  சம்பாத்தியம் பண்ண 
வான் பரந்த சொந்தங்கள் .
சொத்தும் சுகமும் 
 பட்டங்களாய் உருவெடுக்க 
மாயவித்தைக் காரராய் 
மாறிப் போனார் சிலகாலம் .
மிச்சம் மீதி ஒருவனுக்கே 
ஊர் மெச்ச 
மங்கலம் ஊதி முடித்தவுடன் 
வான் விரிந்து பறந்தன சிட்டுகள்.
கூடுவிட்டு கூடு பாய்ந்த 
கலை தந்த குருவானார் சிலகாலம்.
இருட்டுக்குள் துலாவி 
கையேந்தி கையேந்தி 
இதய ஓட்டை இளவரசிக்கு 
ஏணி கொடுக்க விழைந்து 
துணி போர்த்திச் 
சாய்ந்து போனார் சிலகாலம் .
அவர் மனம் போலவே 
கொஞ்சம் கொஞ்சமாய் 
இறந்து கொண்டிருந்தது
அந்த 
சரித்திர வீடு .
வைத்தியர் இல்லா ஊரில் 
கை வைத்தியத்திலேயே
உயிர் ஓட விட்டார் சிலகாலம்.
இத்தனையும்
மெளனமாய் மென்று 
மொக்கை வாய் சிரிக்கும் 
என் அப்பாவை விட 
எந்த ஜென் துறவி 
குருவாய் ஆனவர் 

kavithai

சாகும் வரம் தந்தாய் ......
-----------------------------------
கோபங்களைத் தாங்கித் தாங்கி 
அரண்மனை விரித்து,
ஏரி கருகி 
புழு வைத்தப் பிணமென 
உள்நுழைந்து தீராப்பசியோடு
அரவெனத் தின்று துப்பினாய்
உன்னுலகை ..
இடுகாடும் எருமையும் வயல்வெளியாகிக் 
குண்டுக் கட்டாய் 
பறவையை ஜீரணித்தாய்.
இலை தளை காயாகிப் பூமி மேலர்ந்து 
மேகத்தை உறிஞ்சி 
கால்வழிப் பெய்தாய்.
மகிசாசூர பத்தினியாய் இருமலை தொட்டுக் 
கால்பதித்து 
யோனி காட்டி 
வாசுகி எனை 
முழுதாய் உள்திணித்தாய் 
காரணமேயின்றி 
சாகும் வரம் தந்தாய். 
     ----பாரதிசந்திரன் --

வெள்ளி, 30 டிசம்பர், 2011

இரவு


எத்தனையோ,  திரும்பிப்பார்த்தும்
எகிறி முறைத்தும் அனுசரித்தும்
அஸ்தமித்தும் வந்தவை

எவ்வளவைவிழுங்கியிருப்பேன்.
ஏனிது என்று பார்த்திருப்பேன்.
விழுங்கிய இரவுகளில்
விடியுமட்டில் அட்டகாசம்.
விக்கல் ஏப்பத்துடன்
வியாக்கண விளம்பரங்கள்.
பகலின் பிரசவ வேதனையைப்
பார்த்துத் தடவியதால்,
உடலைப் பறக்கச்சபித்தாய்.
பாவம்-உனக்குள் மறைந்தேன்.
சிலதை விரட்டி
சிந்தனைகளை சிருஷ்டிக்க
சிக்கனமாய்
உன்னுடன்  ஒரு உடன்படிக்கை.
               


                            நன்றி-தொடரும்-இதழ்-ஜனவரி-96

தீக்குச்சிப் பொட்டுகள்

சமூதாயத்தில
இளம் அரும்புகள்
தீக்குச்சிக்குப்பொட்டு வைக்கப்போய்

தானே பொட்டாகிப்
போனார்கள்.



துணிக்குச்சாயம் காய்ச்சப்போய்
தானே
சாயமிழந்து போனார்கள்.


இங்குதான்
அரும்புகளே ஆணிவேரைக்
காப்பாற்றும் அதிசயங்கள்.


மார்க்கண்டேய அடிமைத்தனத்தில்
இரணிய ஆதிக்கங்கள்.

                    நன்றி-கவிக்காவேரி-99




     

வியாழன், 15 டிசம்பர், 2011

ஹைபுன் கவிதை

கையில் குழந்தையுடன்
படியில் நின்றிருந்தவர்களைத் தள்ளிக் கொண்டு  வந்து நின்றார்.

பேருந்தின் நடனத்தை விட அவரின் நடனம் மோசமாய் இருந்தது.

குழந்தையை யாரிடமாவது  கொடுத்து விடலாம்
என்ற முயற்சிக்கு  அழுகைப் பலனளிக்க வில்லை.

யாரும் இடம் தராததால்
நான் எழுந்து  இடம் கொடுத்தேன்.

அசதியுடன் தூர நின்றேன்.
சிறிது நேரம் கழித்துத் திரும்பிப்பார்த்தால் ,

அங்கே மூன்று நாள் அசதியுடன் 
நான் தூங்கிக்கொண்டிருக்கிறேன்
குழந்தை வடிவில்.

புதன், 19 அக்டோபர், 2011

ரத்தச் சூடு--

பனிக் காலத்தில் வெப்பமான 
ரத்தச்   சூடு ,உருண்டையாய்  மலையில் இருந்து 
 தீபக்  காடாய்  எரிந்து மீண்டும் 
பனியாகி  மலையானது .
மலை எரிவதும் 
பிறகு பனி  ஆவதும் 
இப்படியே பூனை  புசித்த போது
 வாழ்க்கை  காணாமல்  போனது .....

பதில் !!!!

என் வீணாகிப்போன   நாட்களுக்காக 
நான் மயங்கிப்  போயி  கிடக்கையில் 
தான்  தெரிந்தது -என் அப்பாவை 
"என்ன பேருசா கிழிச்சாரு "- னு
நான்  கேட்ட  கேள்வியின் 
பதில் !!!!

ஞாயிறு, 16 அக்டோபர், 2011

கனவு வந்தது .

முழித்து நுரைத்தலுடன்
உள் சென்றது
அந்தக் காட்சி .
அடைத்துப் போய் கருப்பாய்
பிசுபிசுசுத்தது .
காற்று கணமே 
ஆனது .

கனவு  வந்தது .

எல்லாமாகி நின்றாய் நீ அம்மா .

அம்மா -அம்மா இன்று  நான்   
பூரணம்  அடைந்தேன் .
அம்மா -அம்மா இன்று நான் 
நிம்மதி அடைந்தேன் .

நிலவைப் பார்க்க நினைத்த போது-
உன் நினைவு தான் 
வருகிறது .

என் குழந்தைக்கு உணவு ஊட்ட
நினைத்த போது-
உன் நினைவு தான் 
வருகிறது .

எல்லாமாகி  நின்றாய் நீ அம்மா.
எனக்குள் -
எல்லாமாகி  நின்றாய் நீ அம்மா .
                           பாரதிச்சந்திரன் .

வெள்ளி, 7 அக்டோபர், 2011

உன் நாணமா?

மேகத்திடம் உனை வரையக்கேட்டேன்.
வரைந்த போது -அழித்தது
உன் நாணமா?

புதன், 5 அக்டோபர், 2011

அவதார் பட விமர்சனம்.

அவதார் பட விமர்சனம்.

     அவதார் என்ற மாபெரும் படம்  என்னை வியப்பின்  எல்லைக்கே  கொண்டு போனது.  நவீன  காட்டுமிராண்டுத் தனத்திற்க்கும்    இயற்கையின் மடியில் தவழும் ஆதிகுடிகளுக்கும் அல்லது அற்புத  ஜீவன்களுக்கும்  இடையில் நிகழும்  போராட்டமே   கதையின்  மையக்கதையாக  ஓடுகிறது.  பிரமாண்டத்தைக்  கண்களுக்குத் தந்த  விதம்  வித்தியாசம்.
     இயற்கையை  மனிதன்  பாதுகாக்கத்  தவறி  விடுகிறான்.  இயற்கையில்லாமல்  ஜீவ்ராசிகள்  சுகமான வாழ்வைப்  பெற்றிடமுடியாது. தன்  வாழ்வை மரம்,  செடி,  கொடி இவற்றினூடு  உட்புகுத்தி  ஊடாடி  அது  தரும்  செய்தியை  விளைவைப்  பெறாது  வாழ  ஏன்   ம்னிதன்  நினைக்கிறான்.  இதை  இப்படம்   உணர்த்தியிருக்கிறது.
     உண்மையாகவே   அண்டத்தில்  உள்ள ஒவ்வொன்றும்   ஏதோ ஒரு வகையில் மனிதனோடு  பேசுகிறது. வாழநினைக்கிறது.ஆனால் இடவாசை, பொருளாசை,அகங்காரம்,ஆணவம்  இவற்றால்  தன்  உலகைத்  தன்  கையாலே  கொள்ளி வைத்துக்கொள்கிறான்.
      நாகரீகம்  இயற்கையின்  உயிரைப் பறிப்பதில்  ஆர்வம்  காட்டுவதைப்  படம்   அழகாகக்  காட்டுகிறது.
      மனிதனாய் ப்   பார்த்துத்  திருந்தாவிட்டால்............

திங்கள், 3 அக்டோபர், 2011

அம்மா என்று சொல்லி ப்பார்த்தேன்

அம்மா  என்று சொல்லி ப்பார்த்தேன் 
அச்சம் போனது .
அருகி நின்றது அனைத்தும் . 
  நானே நான்  ஆனன். 
நல்லதும் அதுவே .......

திங்கள், 26 செப்டம்பர், 2011

 எனது நீ...

 எனது நீ- நீ என்று சொல்லவா?
சொல்லிய நீ -அதை  
சொல் என்று     சொல்!!!

ஞாயிறு, 25 செப்டம்பர், 2011

அலமார்ந்து சிரித்த கடல்....

நண்டு
காலார
கரையைத் தேடிக் வந்து கால் பரப்பி நடந்தது.
சிணுகிக்
சின்னக் குழந்தை ஒன்று
நண்டைப்
கொண்டே கடலைப்பார்த்த பார்த்து நடுங்கித் தெரித்தது.
ஆதிகுணம்
முன்னே
தெரிப்பதற்கு..
கடற்கரையும்
கடலுக்குள்
அலமார்ந்து
கடலின் குழந்தையைக் அணுப்பி விட்டு சிரித்தது.....

நீ பார்த்தால் எப்படி?

 கண்ணைப பார்த்து கவிதை எழுத
நினைத்தேன்
.
நீ
பார்க்கிறாய்
ஏன் என் கண்ணைப்.
நீ
பார்த்தால் எப்படி நான் கவிதை எழுதுவது?