நன்றி......

வணக்கம்.என் தளத்திற்க்கு வருகை தந்தமைக்கு நன்றிகள்.கருத்திடுக.....

வெள்ளி, 30 டிசம்பர், 2011

இரவு


எத்தனையோ,  திரும்பிப்பார்த்தும்
எகிறி முறைத்தும் அனுசரித்தும்
அஸ்தமித்தும் வந்தவை

எவ்வளவைவிழுங்கியிருப்பேன்.
ஏனிது என்று பார்த்திருப்பேன்.
விழுங்கிய இரவுகளில்
விடியுமட்டில் அட்டகாசம்.
விக்கல் ஏப்பத்துடன்
வியாக்கண விளம்பரங்கள்.
பகலின் பிரசவ வேதனையைப்
பார்த்துத் தடவியதால்,
உடலைப் பறக்கச்சபித்தாய்.
பாவம்-உனக்குள் மறைந்தேன்.
சிலதை விரட்டி
சிந்தனைகளை சிருஷ்டிக்க
சிக்கனமாய்
உன்னுடன்  ஒரு உடன்படிக்கை.
               


                            நன்றி-தொடரும்-இதழ்-ஜனவரி-96

தீக்குச்சிப் பொட்டுகள்

சமூதாயத்தில
இளம் அரும்புகள்
தீக்குச்சிக்குப்பொட்டு வைக்கப்போய்

தானே பொட்டாகிப்
போனார்கள்.



துணிக்குச்சாயம் காய்ச்சப்போய்
தானே
சாயமிழந்து போனார்கள்.


இங்குதான்
அரும்புகளே ஆணிவேரைக்
காப்பாற்றும் அதிசயங்கள்.


மார்க்கண்டேய அடிமைத்தனத்தில்
இரணிய ஆதிக்கங்கள்.

                    நன்றி-கவிக்காவேரி-99




     

வியாழன், 15 டிசம்பர், 2011

ஹைபுன் கவிதை

கையில் குழந்தையுடன்
படியில் நின்றிருந்தவர்களைத் தள்ளிக் கொண்டு  வந்து நின்றார்.

பேருந்தின் நடனத்தை விட அவரின் நடனம் மோசமாய் இருந்தது.

குழந்தையை யாரிடமாவது  கொடுத்து விடலாம்
என்ற முயற்சிக்கு  அழுகைப் பலனளிக்க வில்லை.

யாரும் இடம் தராததால்
நான் எழுந்து  இடம் கொடுத்தேன்.

அசதியுடன் தூர நின்றேன்.
சிறிது நேரம் கழித்துத் திரும்பிப்பார்த்தால் ,

அங்கே மூன்று நாள் அசதியுடன் 
நான் தூங்கிக்கொண்டிருக்கிறேன்
குழந்தை வடிவில்.

புதன், 19 அக்டோபர், 2011

ரத்தச் சூடு--

பனிக் காலத்தில் வெப்பமான 
ரத்தச்   சூடு ,உருண்டையாய்  மலையில் இருந்து 
 தீபக்  காடாய்  எரிந்து மீண்டும் 
பனியாகி  மலையானது .
மலை எரிவதும் 
பிறகு பனி  ஆவதும் 
இப்படியே பூனை  புசித்த போது
 வாழ்க்கை  காணாமல்  போனது .....

பதில் !!!!

என் வீணாகிப்போன   நாட்களுக்காக 
நான் மயங்கிப்  போயி  கிடக்கையில் 
தான்  தெரிந்தது -என் அப்பாவை 
"என்ன பேருசா கிழிச்சாரு "- னு
நான்  கேட்ட  கேள்வியின் 
பதில் !!!!

ஞாயிறு, 16 அக்டோபர், 2011

கனவு வந்தது .

முழித்து நுரைத்தலுடன்
உள் சென்றது
அந்தக் காட்சி .
அடைத்துப் போய் கருப்பாய்
பிசுபிசுசுத்தது .
காற்று கணமே 
ஆனது .

கனவு  வந்தது .

எல்லாமாகி நின்றாய் நீ அம்மா .

அம்மா -அம்மா இன்று  நான்   
பூரணம்  அடைந்தேன் .
அம்மா -அம்மா இன்று நான் 
நிம்மதி அடைந்தேன் .

நிலவைப் பார்க்க நினைத்த போது-
உன் நினைவு தான் 
வருகிறது .

என் குழந்தைக்கு உணவு ஊட்ட
நினைத்த போது-
உன் நினைவு தான் 
வருகிறது .

எல்லாமாகி  நின்றாய் நீ அம்மா.
எனக்குள் -
எல்லாமாகி  நின்றாய் நீ அம்மா .
                           பாரதிச்சந்திரன் .

வெள்ளி, 7 அக்டோபர், 2011

உன் நாணமா?

மேகத்திடம் உனை வரையக்கேட்டேன்.
வரைந்த போது -அழித்தது
உன் நாணமா?

புதன், 5 அக்டோபர், 2011

அவதார் பட விமர்சனம்.

அவதார் பட விமர்சனம்.

     அவதார் என்ற மாபெரும் படம்  என்னை வியப்பின்  எல்லைக்கே  கொண்டு போனது.  நவீன  காட்டுமிராண்டுத் தனத்திற்க்கும்    இயற்கையின் மடியில் தவழும் ஆதிகுடிகளுக்கும் அல்லது அற்புத  ஜீவன்களுக்கும்  இடையில் நிகழும்  போராட்டமே   கதையின்  மையக்கதையாக  ஓடுகிறது.  பிரமாண்டத்தைக்  கண்களுக்குத் தந்த  விதம்  வித்தியாசம்.
     இயற்கையை  மனிதன்  பாதுகாக்கத்  தவறி  விடுகிறான்.  இயற்கையில்லாமல்  ஜீவ்ராசிகள்  சுகமான வாழ்வைப்  பெற்றிடமுடியாது. தன்  வாழ்வை மரம்,  செடி,  கொடி இவற்றினூடு  உட்புகுத்தி  ஊடாடி  அது  தரும்  செய்தியை  விளைவைப்  பெறாது  வாழ  ஏன்   ம்னிதன்  நினைக்கிறான்.  இதை  இப்படம்   உணர்த்தியிருக்கிறது.
     உண்மையாகவே   அண்டத்தில்  உள்ள ஒவ்வொன்றும்   ஏதோ ஒரு வகையில் மனிதனோடு  பேசுகிறது. வாழநினைக்கிறது.ஆனால் இடவாசை, பொருளாசை,அகங்காரம்,ஆணவம்  இவற்றால்  தன்  உலகைத்  தன்  கையாலே  கொள்ளி வைத்துக்கொள்கிறான்.
      நாகரீகம்  இயற்கையின்  உயிரைப் பறிப்பதில்  ஆர்வம்  காட்டுவதைப்  படம்   அழகாகக்  காட்டுகிறது.
      மனிதனாய் ப்   பார்த்துத்  திருந்தாவிட்டால்............

திங்கள், 3 அக்டோபர், 2011

அம்மா என்று சொல்லி ப்பார்த்தேன்

அம்மா  என்று சொல்லி ப்பார்த்தேன் 
அச்சம் போனது .
அருகி நின்றது அனைத்தும் . 
  நானே நான்  ஆனன். 
நல்லதும் அதுவே .......

திங்கள், 26 செப்டம்பர், 2011

 எனது நீ...

 எனது நீ- நீ என்று சொல்லவா?
சொல்லிய நீ -அதை  
சொல் என்று     சொல்!!!

ஞாயிறு, 25 செப்டம்பர், 2011

அலமார்ந்து சிரித்த கடல்....

நண்டு
காலார
கரையைத் தேடிக் வந்து கால் பரப்பி நடந்தது.
சிணுகிக்
சின்னக் குழந்தை ஒன்று
நண்டைப்
கொண்டே கடலைப்பார்த்த பார்த்து நடுங்கித் தெரித்தது.
ஆதிகுணம்
முன்னே
தெரிப்பதற்கு..
கடற்கரையும்
கடலுக்குள்
அலமார்ந்து
கடலின் குழந்தையைக் அணுப்பி விட்டு சிரித்தது.....

நீ பார்த்தால் எப்படி?

 கண்ணைப பார்த்து கவிதை எழுத
நினைத்தேன்
.
நீ
பார்க்கிறாய்
ஏன் என் கண்ணைப்.
நீ
பார்த்தால் எப்படி நான் கவிதை எழுதுவது?