நன்றி......

வணக்கம்.என் தளத்திற்க்கு வருகை தந்தமைக்கு நன்றிகள்.கருத்திடுக.....

வியாழன், 15 டிசம்பர், 2011

ஹைபுன் கவிதை

கையில் குழந்தையுடன்
படியில் நின்றிருந்தவர்களைத் தள்ளிக் கொண்டு  வந்து நின்றார்.

பேருந்தின் நடனத்தை விட அவரின் நடனம் மோசமாய் இருந்தது.

குழந்தையை யாரிடமாவது  கொடுத்து விடலாம்
என்ற முயற்சிக்கு  அழுகைப் பலனளிக்க வில்லை.

யாரும் இடம் தராததால்
நான் எழுந்து  இடம் கொடுத்தேன்.

அசதியுடன் தூர நின்றேன்.
சிறிது நேரம் கழித்துத் திரும்பிப்பார்த்தால் ,

அங்கே மூன்று நாள் அசதியுடன் 
நான் தூங்கிக்கொண்டிருக்கிறேன்
குழந்தை வடிவில்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக