நன்றி......

வணக்கம்.என் தளத்திற்க்கு வருகை தந்தமைக்கு நன்றிகள்.கருத்திடுக.....

வியாழன், 6 ஜூன், 2013

மூளைத் தொழில்

மூளைத் தொழில்


கூறெனப் பாய்ந்து
வானத்தில் ஏறும் வல்லூறுகளின் பார்வையில்
பூமி சிறிதானது.

பெய்த சிறுநீர்  பகீரதன்
வரவழைத்த புனித நதியெனப்
 பிரவாகமெடுக்கின்றன.

பிடரி சிலிர்த்த குதிரைகள்
கோவேறு கழுதையாய் மாறி
தொண்டை கணைத்துப் பேப்பர் தேடி ஓய்ந்தது.
கம்பெடுத்தவன் தண்டல்காரன்.

திசையெங்கும் அவள்
அரிதாரம்.
கற்றவை மறந்து தேடி அலைகிறாள்
சிவப்புத் தாமரை சரஸ்வதி.
படிச்சிப் படிச்சி நீர்த்தாள்.
சிவப்புப்புழுக்கள் உண்டு நெளியும்
மூளைக்காரனிடம்.

கடலுக்குள் நிசப்தமென
அறிவுலகம் துகில் கொள்கிறது.
         
               பாரதிசந்திரன்   திரு நின்றவூர்.

பிச்சைத் தாய்

பிச்சைத் தாய்

கோயில் வாசலில் கேட்ட 
வித வித பிச்சை ஒலிகள் 
நெஞ்சை கழற்றித் தூரப்போட்டன .
தோள் சுருங்கிய தாயின் குரல் 
உள் நுழைந்து 
பின்புலப் படமுடன் கதை விரிந்தன .
எச்சூழ்நிலை தள்ளியது அவளை .

எல்லாம் வல்ல தான் தோன்றி அவன் 
வாசலை ஏன் வறுமையின் 
சின்னமாக்கினான் .

சாலைகளின் நடுவில்,பேருந்து  நிறுத்தத்தில்,
தொடர் வண்டிக்குள் பூங்காவில் இப்படியாய் 
தாயை நிறுத்திய 
எவனோ ,எவளோ-
 தாய்ப்பால் குடித்த அவர்களின் 
வாயை வெட்டிப் பிய்த்தாலென்ன ?

தலை மேல் கை வை 
வாழும் என் வாழ்வென 
கைதட்டி வரும் மாதொரு பாகருக்குப் 
பத்தோ ,ஐம்பதோ 
தரும் தருமர்களே 
பிச்சைத் தாய் வருவது 
மறைந்து போனது ஏனோ ?

பள்ளியில் பணம் கட்டிப் படிக்க வைத்தத் 
தோஷம் போக்க 
முதிர்ந்த பொழுது பணம் கட்டி
அனுப்பி வைத்தாயோ 
முதியோர் இல்லத்திற்கு ?
அவளும் பிச்சைத் தாய் தானோ?

தாய்க்குத் திவசம் 
ஒலி வசியம் செய்தவருக்கு 
தடித்த பணம்  தட்டில் வைத்தாய்.
வயிறு பிழிந்த பசியோடு நின்ற 
பிச்சைத் தாயைப் 
பிண்ட சோறு பொறுக்க விட்டாய் .

சுற்றுப்புறக் கல்வி

வீட்டுக்குள் ஏசி போட்டாச்சு 
ஓசோனுக்குள் ஊசி குத்தியாச்சு

காதைப் பிளக்கும்-சத்தம்-அது
சாகும்பறை கொட்டும் நித்தம்

மரம் வளர்த்தால் மழை 
அதைத் 
தினம் மறந்தால் பிழை

பணப்பை
நிரப்ப கலக்கின்றோம்
நீரில் சாயம் .
வாய்க்கு நீரின்றித் தவிக்கின்றோம் 
வாழ்வு மாயம் .

காடழித்து நாடாகுமோ
கண்ணழித்து சுகமாகுமோ


வீட்டுக்கொரு மரம் வளர்த்தால் 
வீறு கொண்டு மழை பிறக்கும்

வெப்பச் சலனம் தடுத்திடுவோம் 
வெற்றிடங்கள் யாவும் மரம் வளர்த்திட்டால்

மரத்தை வளர்ப்போம் மகத்துவத்தை 
மனிதத்தைக் காப்போம்

ஏசி காற்றை விட 
ஓசிக் காற்று உயர்ந்தது .

குருவாய் ஆனவர்

குருவாய் ஆனவர்
--------------------------------
மேடும் பள்ளமுமான 
கிராமத்தில் 
சரித்திரங்கள்  உலவும் 
பழைய வீடு.
வயல்வெளியும் ,சுய தொழிலும் நசுங்கத் 
தேடித் தேடிச்  சம்பாத்தியம் பண்ண 
வான் பரந்த சொந்தங்கள் .
சொத்தும் சுகமும் 
 பட்டங்களாய் உருவெடுக்க 
மாயவித்தைக் காரராய் 
மாறிப் போனார் சிலகாலம் .
மிச்சம் மீதி ஒருவனுக்கே 
ஊர் மெச்ச 
மங்கலம் ஊதி முடித்தவுடன் 
வான் விரிந்து பறந்தன சிட்டுகள்.
கூடுவிட்டு கூடு பாய்ந்த 
கலை தந்த குருவானார் சிலகாலம்.
இருட்டுக்குள் துலாவி 
கையேந்தி கையேந்தி 
இதய ஓட்டை இளவரசிக்கு 
ஏணி கொடுக்க விழைந்து 
துணி போர்த்திச் 
சாய்ந்து போனார் சிலகாலம் .
அவர் மனம் போலவே 
கொஞ்சம் கொஞ்சமாய் 
இறந்து கொண்டிருந்தது
அந்த 
சரித்திர வீடு .
வைத்தியர் இல்லா ஊரில் 
கை வைத்தியத்திலேயே
உயிர் ஓட விட்டார் சிலகாலம்.
இத்தனையும்
மெளனமாய் மென்று 
மொக்கை வாய் சிரிக்கும் 
என் அப்பாவை விட 
எந்த ஜென் துறவி 
குருவாய் ஆனவர் 

kavithai

சாகும் வரம் தந்தாய் ......
-----------------------------------
கோபங்களைத் தாங்கித் தாங்கி 
அரண்மனை விரித்து,
ஏரி கருகி 
புழு வைத்தப் பிணமென 
உள்நுழைந்து தீராப்பசியோடு
அரவெனத் தின்று துப்பினாய்
உன்னுலகை ..
இடுகாடும் எருமையும் வயல்வெளியாகிக் 
குண்டுக் கட்டாய் 
பறவையை ஜீரணித்தாய்.
இலை தளை காயாகிப் பூமி மேலர்ந்து 
மேகத்தை உறிஞ்சி 
கால்வழிப் பெய்தாய்.
மகிசாசூர பத்தினியாய் இருமலை தொட்டுக் 
கால்பதித்து 
யோனி காட்டி 
வாசுகி எனை 
முழுதாய் உள்திணித்தாய் 
காரணமேயின்றி 
சாகும் வரம் தந்தாய். 
     ----பாரதிசந்திரன் --