நன்றி......

வணக்கம்.என் தளத்திற்க்கு வருகை தந்தமைக்கு நன்றிகள்.கருத்திடுக.....

வியாழன், 6 ஜூன், 2013

மூளைத் தொழில்

மூளைத் தொழில்


கூறெனப் பாய்ந்து
வானத்தில் ஏறும் வல்லூறுகளின் பார்வையில்
பூமி சிறிதானது.

பெய்த சிறுநீர்  பகீரதன்
வரவழைத்த புனித நதியெனப்
 பிரவாகமெடுக்கின்றன.

பிடரி சிலிர்த்த குதிரைகள்
கோவேறு கழுதையாய் மாறி
தொண்டை கணைத்துப் பேப்பர் தேடி ஓய்ந்தது.
கம்பெடுத்தவன் தண்டல்காரன்.

திசையெங்கும் அவள்
அரிதாரம்.
கற்றவை மறந்து தேடி அலைகிறாள்
சிவப்புத் தாமரை சரஸ்வதி.
படிச்சிப் படிச்சி நீர்த்தாள்.
சிவப்புப்புழுக்கள் உண்டு நெளியும்
மூளைக்காரனிடம்.

கடலுக்குள் நிசப்தமென
அறிவுலகம் துகில் கொள்கிறது.
         
               பாரதிசந்திரன்   திரு நின்றவூர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக