நன்றி......

வணக்கம்.என் தளத்திற்க்கு வருகை தந்தமைக்கு நன்றிகள்.கருத்திடுக.....

புதன், 9 ஜூலை, 2014

வீட்டு நாய்


அந்த வீட்டில் செல்லமாய் 
ஒரு நாய்க்குட்டி வளர்ந்தது .
மனிதருக்கும் மனிதருக்குமான 
எல்லாம் போய் 
ஆறுகள் ஐந்தைக் கட்டித் 
தழுவிக் கொண்டன.

கட்டியவனைக் காட்டிலும் 
கட்டிக்கிடந்ததிற்க்கு ஏக உபச்சாரம்.

உணவுக்கான மெனு என்ன 
தனி சோப்பு என்ன 
விரிப்பு என்ன 
மாதந்தவறாத ஊசி என்ன 
கவனிப்பு சொல்லி மாளாது.

அதன் உலகைத் தாண்டிச் சந்தோசமாய் 
எப்படி உம்மோடு அது காலம் தள்ளும் .
கூட்டம் தவிர்த்து 
உறவு தவிர்த்து 
குஷி தவிர்த்து 
இன்னும் எத்தனை துறந்து 
இன்னும் எத்தனை தூறம் 
உன்னோடு அது வாழ வேண்டும்.

உண்மையில் 
அதற்குப் பேச முடியுமானால் 
என்னவெல்லாம் 
உம்மிடம் அது  கேட்க நினைக்கும் .

ஒரு தனித் தீவில் 
காட்டு யானைகள் 
உன்னைக் கட்டிப் போட்டுப் 
பாசம் காட்டுகின்றன.
நீ யார் எனப் புரிந்து கொள்கிறாய்
காட்டுநார்கள் பிய்த்து எதிர்ந்து 
ஓடி ஓடிக் 
களைப்பாறும் நாளில்  
நாயாக நீ மாறி 
மனிதனாக அது மாறி  

நாய்களை விட்டு விடுங்கள் 
அது அதுகளோடு அதுவாகவே 
இருந்து விட்டுப் போகட்டும்.








நன்றி 
முத்துக்கமலம்.காம் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக