நன்றி......

வணக்கம்.என் தளத்திற்க்கு வருகை தந்தமைக்கு நன்றிகள்.கருத்திடுக.....
kavithai லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
kavithai லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 30 டிசம்பர், 2011

தீக்குச்சிப் பொட்டுகள்

சமூதாயத்தில
இளம் அரும்புகள்
தீக்குச்சிக்குப்பொட்டு வைக்கப்போய்

தானே பொட்டாகிப்
போனார்கள்.



துணிக்குச்சாயம் காய்ச்சப்போய்
தானே
சாயமிழந்து போனார்கள்.


இங்குதான்
அரும்புகளே ஆணிவேரைக்
காப்பாற்றும் அதிசயங்கள்.


மார்க்கண்டேய அடிமைத்தனத்தில்
இரணிய ஆதிக்கங்கள்.

                    நன்றி-கவிக்காவேரி-99




     

வியாழன், 15 டிசம்பர், 2011

ஹைபுன் கவிதை

கையில் குழந்தையுடன்
படியில் நின்றிருந்தவர்களைத் தள்ளிக் கொண்டு  வந்து நின்றார்.

பேருந்தின் நடனத்தை விட அவரின் நடனம் மோசமாய் இருந்தது.

குழந்தையை யாரிடமாவது  கொடுத்து விடலாம்
என்ற முயற்சிக்கு  அழுகைப் பலனளிக்க வில்லை.

யாரும் இடம் தராததால்
நான் எழுந்து  இடம் கொடுத்தேன்.

அசதியுடன் தூர நின்றேன்.
சிறிது நேரம் கழித்துத் திரும்பிப்பார்த்தால் ,

அங்கே மூன்று நாள் அசதியுடன் 
நான் தூங்கிக்கொண்டிருக்கிறேன்
குழந்தை வடிவில்.

புதன், 19 அக்டோபர், 2011

ரத்தச் சூடு--

பனிக் காலத்தில் வெப்பமான 
ரத்தச்   சூடு ,உருண்டையாய்  மலையில் இருந்து 
 தீபக்  காடாய்  எரிந்து மீண்டும் 
பனியாகி  மலையானது .
மலை எரிவதும் 
பிறகு பனி  ஆவதும் 
இப்படியே பூனை  புசித்த போது
 வாழ்க்கை  காணாமல்  போனது .....

பதில் !!!!

என் வீணாகிப்போன   நாட்களுக்காக 
நான் மயங்கிப்  போயி  கிடக்கையில் 
தான்  தெரிந்தது -என் அப்பாவை 
"என்ன பேருசா கிழிச்சாரு "- னு
நான்  கேட்ட  கேள்வியின் 
பதில் !!!!

ஞாயிறு, 16 அக்டோபர், 2011

கனவு வந்தது .

முழித்து நுரைத்தலுடன்
உள் சென்றது
அந்தக் காட்சி .
அடைத்துப் போய் கருப்பாய்
பிசுபிசுசுத்தது .
காற்று கணமே 
ஆனது .

கனவு  வந்தது .

எல்லாமாகி நின்றாய் நீ அம்மா .

அம்மா -அம்மா இன்று  நான்   
பூரணம்  அடைந்தேன் .
அம்மா -அம்மா இன்று நான் 
நிம்மதி அடைந்தேன் .

நிலவைப் பார்க்க நினைத்த போது-
உன் நினைவு தான் 
வருகிறது .

என் குழந்தைக்கு உணவு ஊட்ட
நினைத்த போது-
உன் நினைவு தான் 
வருகிறது .

எல்லாமாகி  நின்றாய் நீ அம்மா.
எனக்குள் -
எல்லாமாகி  நின்றாய் நீ அம்மா .
                           பாரதிச்சந்திரன் .

வெள்ளி, 7 அக்டோபர், 2011

உன் நாணமா?

மேகத்திடம் உனை வரையக்கேட்டேன்.
வரைந்த போது -அழித்தது
உன் நாணமா?

திங்கள், 3 அக்டோபர், 2011

அம்மா என்று சொல்லி ப்பார்த்தேன்

அம்மா  என்று சொல்லி ப்பார்த்தேன் 
அச்சம் போனது .
அருகி நின்றது அனைத்தும் . 
  நானே நான்  ஆனன். 
நல்லதும் அதுவே .......

திங்கள், 26 செப்டம்பர், 2011

 எனது நீ...

 எனது நீ- நீ என்று சொல்லவா?
சொல்லிய நீ -அதை  
சொல் என்று     சொல்!!!

ஞாயிறு, 25 செப்டம்பர், 2011

நீ பார்த்தால் எப்படி?

 கண்ணைப பார்த்து கவிதை எழுத
நினைத்தேன்
.
நீ
பார்க்கிறாய்
ஏன் என் கண்ணைப்.
நீ
பார்த்தால் எப்படி நான் கவிதை எழுதுவது?