நன்றி......

வணக்கம்.என் தளத்திற்க்கு வருகை தந்தமைக்கு நன்றிகள்.கருத்திடுக.....

வெள்ளி, 30 டிசம்பர், 2011

இரவு


எத்தனையோ,  திரும்பிப்பார்த்தும்
எகிறி முறைத்தும் அனுசரித்தும்
அஸ்தமித்தும் வந்தவை

எவ்வளவைவிழுங்கியிருப்பேன்.
ஏனிது என்று பார்த்திருப்பேன்.
விழுங்கிய இரவுகளில்
விடியுமட்டில் அட்டகாசம்.
விக்கல் ஏப்பத்துடன்
வியாக்கண விளம்பரங்கள்.
பகலின் பிரசவ வேதனையைப்
பார்த்துத் தடவியதால்,
உடலைப் பறக்கச்சபித்தாய்.
பாவம்-உனக்குள் மறைந்தேன்.
சிலதை விரட்டி
சிந்தனைகளை சிருஷ்டிக்க
சிக்கனமாய்
உன்னுடன்  ஒரு உடன்படிக்கை.
               


                            நன்றி-தொடரும்-இதழ்-ஜனவரி-96

தீக்குச்சிப் பொட்டுகள்

சமூதாயத்தில
இளம் அரும்புகள்
தீக்குச்சிக்குப்பொட்டு வைக்கப்போய்

தானே பொட்டாகிப்
போனார்கள்.



துணிக்குச்சாயம் காய்ச்சப்போய்
தானே
சாயமிழந்து போனார்கள்.


இங்குதான்
அரும்புகளே ஆணிவேரைக்
காப்பாற்றும் அதிசயங்கள்.


மார்க்கண்டேய அடிமைத்தனத்தில்
இரணிய ஆதிக்கங்கள்.

                    நன்றி-கவிக்காவேரி-99




     

வியாழன், 15 டிசம்பர், 2011

ஹைபுன் கவிதை

கையில் குழந்தையுடன்
படியில் நின்றிருந்தவர்களைத் தள்ளிக் கொண்டு  வந்து நின்றார்.

பேருந்தின் நடனத்தை விட அவரின் நடனம் மோசமாய் இருந்தது.

குழந்தையை யாரிடமாவது  கொடுத்து விடலாம்
என்ற முயற்சிக்கு  அழுகைப் பலனளிக்க வில்லை.

யாரும் இடம் தராததால்
நான் எழுந்து  இடம் கொடுத்தேன்.

அசதியுடன் தூர நின்றேன்.
சிறிது நேரம் கழித்துத் திரும்பிப்பார்த்தால் ,

அங்கே மூன்று நாள் அசதியுடன் 
நான் தூங்கிக்கொண்டிருக்கிறேன்
குழந்தை வடிவில்.