நன்றி......

வணக்கம்.என் தளத்திற்க்கு வருகை தந்தமைக்கு நன்றிகள்.கருத்திடுக.....

புதன், 19 அக்டோபர், 2011

ரத்தச் சூடு--

பனிக் காலத்தில் வெப்பமான 
ரத்தச்   சூடு ,உருண்டையாய்  மலையில் இருந்து 
 தீபக்  காடாய்  எரிந்து மீண்டும் 
பனியாகி  மலையானது .
மலை எரிவதும் 
பிறகு பனி  ஆவதும் 
இப்படியே பூனை  புசித்த போது
 வாழ்க்கை  காணாமல்  போனது .....

பதில் !!!!

என் வீணாகிப்போன   நாட்களுக்காக 
நான் மயங்கிப்  போயி  கிடக்கையில் 
தான்  தெரிந்தது -என் அப்பாவை 
"என்ன பேருசா கிழிச்சாரு "- னு
நான்  கேட்ட  கேள்வியின் 
பதில் !!!!

ஞாயிறு, 16 அக்டோபர், 2011

கனவு வந்தது .

முழித்து நுரைத்தலுடன்
உள் சென்றது
அந்தக் காட்சி .
அடைத்துப் போய் கருப்பாய்
பிசுபிசுசுத்தது .
காற்று கணமே 
ஆனது .

கனவு  வந்தது .

எல்லாமாகி நின்றாய் நீ அம்மா .

அம்மா -அம்மா இன்று  நான்   
பூரணம்  அடைந்தேன் .
அம்மா -அம்மா இன்று நான் 
நிம்மதி அடைந்தேன் .

நிலவைப் பார்க்க நினைத்த போது-
உன் நினைவு தான் 
வருகிறது .

என் குழந்தைக்கு உணவு ஊட்ட
நினைத்த போது-
உன் நினைவு தான் 
வருகிறது .

எல்லாமாகி  நின்றாய் நீ அம்மா.
எனக்குள் -
எல்லாமாகி  நின்றாய் நீ அம்மா .
                           பாரதிச்சந்திரன் .

வெள்ளி, 7 அக்டோபர், 2011

உன் நாணமா?

மேகத்திடம் உனை வரையக்கேட்டேன்.
வரைந்த போது -அழித்தது
உன் நாணமா?

புதன், 5 அக்டோபர், 2011

அவதார் பட விமர்சனம்.

அவதார் பட விமர்சனம்.

     அவதார் என்ற மாபெரும் படம்  என்னை வியப்பின்  எல்லைக்கே  கொண்டு போனது.  நவீன  காட்டுமிராண்டுத் தனத்திற்க்கும்    இயற்கையின் மடியில் தவழும் ஆதிகுடிகளுக்கும் அல்லது அற்புத  ஜீவன்களுக்கும்  இடையில் நிகழும்  போராட்டமே   கதையின்  மையக்கதையாக  ஓடுகிறது.  பிரமாண்டத்தைக்  கண்களுக்குத் தந்த  விதம்  வித்தியாசம்.
     இயற்கையை  மனிதன்  பாதுகாக்கத்  தவறி  விடுகிறான்.  இயற்கையில்லாமல்  ஜீவ்ராசிகள்  சுகமான வாழ்வைப்  பெற்றிடமுடியாது. தன்  வாழ்வை மரம்,  செடி,  கொடி இவற்றினூடு  உட்புகுத்தி  ஊடாடி  அது  தரும்  செய்தியை  விளைவைப்  பெறாது  வாழ  ஏன்   ம்னிதன்  நினைக்கிறான்.  இதை  இப்படம்   உணர்த்தியிருக்கிறது.
     உண்மையாகவே   அண்டத்தில்  உள்ள ஒவ்வொன்றும்   ஏதோ ஒரு வகையில் மனிதனோடு  பேசுகிறது. வாழநினைக்கிறது.ஆனால் இடவாசை, பொருளாசை,அகங்காரம்,ஆணவம்  இவற்றால்  தன்  உலகைத்  தன்  கையாலே  கொள்ளி வைத்துக்கொள்கிறான்.
      நாகரீகம்  இயற்கையின்  உயிரைப் பறிப்பதில்  ஆர்வம்  காட்டுவதைப்  படம்   அழகாகக்  காட்டுகிறது.
      மனிதனாய் ப்   பார்த்துத்  திருந்தாவிட்டால்............

திங்கள், 3 அக்டோபர், 2011

அம்மா என்று சொல்லி ப்பார்த்தேன்

அம்மா  என்று சொல்லி ப்பார்த்தேன் 
அச்சம் போனது .
அருகி நின்றது அனைத்தும் . 
  நானே நான்  ஆனன். 
நல்லதும் அதுவே .......