நன்றி......

வணக்கம்.என் தளத்திற்க்கு வருகை தந்தமைக்கு நன்றிகள்.கருத்திடுக.....

புதன், 5 அக்டோபர், 2011

அவதார் பட விமர்சனம்.

அவதார் பட விமர்சனம்.

     அவதார் என்ற மாபெரும் படம்  என்னை வியப்பின்  எல்லைக்கே  கொண்டு போனது.  நவீன  காட்டுமிராண்டுத் தனத்திற்க்கும்    இயற்கையின் மடியில் தவழும் ஆதிகுடிகளுக்கும் அல்லது அற்புத  ஜீவன்களுக்கும்  இடையில் நிகழும்  போராட்டமே   கதையின்  மையக்கதையாக  ஓடுகிறது.  பிரமாண்டத்தைக்  கண்களுக்குத் தந்த  விதம்  வித்தியாசம்.
     இயற்கையை  மனிதன்  பாதுகாக்கத்  தவறி  விடுகிறான்.  இயற்கையில்லாமல்  ஜீவ்ராசிகள்  சுகமான வாழ்வைப்  பெற்றிடமுடியாது. தன்  வாழ்வை மரம்,  செடி,  கொடி இவற்றினூடு  உட்புகுத்தி  ஊடாடி  அது  தரும்  செய்தியை  விளைவைப்  பெறாது  வாழ  ஏன்   ம்னிதன்  நினைக்கிறான்.  இதை  இப்படம்   உணர்த்தியிருக்கிறது.
     உண்மையாகவே   அண்டத்தில்  உள்ள ஒவ்வொன்றும்   ஏதோ ஒரு வகையில் மனிதனோடு  பேசுகிறது. வாழநினைக்கிறது.ஆனால் இடவாசை, பொருளாசை,அகங்காரம்,ஆணவம்  இவற்றால்  தன்  உலகைத்  தன்  கையாலே  கொள்ளி வைத்துக்கொள்கிறான்.
      நாகரீகம்  இயற்கையின்  உயிரைப் பறிப்பதில்  ஆர்வம்  காட்டுவதைப்  படம்   அழகாகக்  காட்டுகிறது.
      மனிதனாய் ப்   பார்த்துத்  திருந்தாவிட்டால்............

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக