நன்றி......

வணக்கம்.என் தளத்திற்க்கு வருகை தந்தமைக்கு நன்றிகள்.கருத்திடுக.....

புதன், 9 ஜூலை, 2014

பிரவாகம் (கவிதை)

பிரவாகம்

மண்டையின் 
உள்கருகி
காது  வழி   வீரியத்துடன்
புகையாய்   சென்ற   நீயா
வானத்தில்    மேகமாய்  அலைவது?


 தேகத்தின்
செதிலொன்று   கழன்று
மீறிப் போய்த்    திரிந்து
உரு மாறிப்போன   நீயா
காற்றாய் உலகில் கடப்பது?

தூக்கச்   சுணங்கில்
வாய்வழிச்   சிந்திய
கொடு   பிரவாகமெடுத்து
பறவைச்  சிறகெடுத்த  நேரத்தில்
பனியாகிப் போன நீயா
வாழ்விக்கும் நீராய் இருப்பது?

வெளி உள்ளானது 
சித்தன் சொன்னது

உள் உள்ளுக்குள்
தீராது 
பயணத்தில்
முழ்கி சூன்யத்தைத்
தன் பெயராக்கி நின்றது.


நன்றி 
முத்துக்கமலம்.காம் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக