நன்றி......

வணக்கம்.என் தளத்திற்க்கு வருகை தந்தமைக்கு நன்றிகள்.கருத்திடுக.....

வியாழன், 6 ஜூன், 2013

kavithai

சாகும் வரம் தந்தாய் ......
-----------------------------------
கோபங்களைத் தாங்கித் தாங்கி 
அரண்மனை விரித்து,
ஏரி கருகி 
புழு வைத்தப் பிணமென 
உள்நுழைந்து தீராப்பசியோடு
அரவெனத் தின்று துப்பினாய்
உன்னுலகை ..
இடுகாடும் எருமையும் வயல்வெளியாகிக் 
குண்டுக் கட்டாய் 
பறவையை ஜீரணித்தாய்.
இலை தளை காயாகிப் பூமி மேலர்ந்து 
மேகத்தை உறிஞ்சி 
கால்வழிப் பெய்தாய்.
மகிசாசூர பத்தினியாய் இருமலை தொட்டுக் 
கால்பதித்து 
யோனி காட்டி 
வாசுகி எனை 
முழுதாய் உள்திணித்தாய் 
காரணமேயின்றி 
சாகும் வரம் தந்தாய். 
     ----பாரதிசந்திரன் --

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக