நன்றி......

வணக்கம்.என் தளத்திற்க்கு வருகை தந்தமைக்கு நன்றிகள்.கருத்திடுக.....

வியாழன், 6 ஜூன், 2013

சுற்றுப்புறக் கல்வி

வீட்டுக்குள் ஏசி போட்டாச்சு 
ஓசோனுக்குள் ஊசி குத்தியாச்சு

காதைப் பிளக்கும்-சத்தம்-அது
சாகும்பறை கொட்டும் நித்தம்

மரம் வளர்த்தால் மழை 
அதைத் 
தினம் மறந்தால் பிழை

பணப்பை
நிரப்ப கலக்கின்றோம்
நீரில் சாயம் .
வாய்க்கு நீரின்றித் தவிக்கின்றோம் 
வாழ்வு மாயம் .

காடழித்து நாடாகுமோ
கண்ணழித்து சுகமாகுமோ


வீட்டுக்கொரு மரம் வளர்த்தால் 
வீறு கொண்டு மழை பிறக்கும்

வெப்பச் சலனம் தடுத்திடுவோம் 
வெற்றிடங்கள் யாவும் மரம் வளர்த்திட்டால்

மரத்தை வளர்ப்போம் மகத்துவத்தை 
மனிதத்தைக் காப்போம்

ஏசி காற்றை விட 
ஓசிக் காற்று உயர்ந்தது .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக