நன்றி......

வணக்கம்.என் தளத்திற்க்கு வருகை தந்தமைக்கு நன்றிகள்.கருத்திடுக.....

திங்கள், 19 ஜூன், 2023

தமிழ்ச் சிற்றிதழ்களின் நவீன படைப்புலகம்- பாராட்டுரை

 

தமிழ்ச் சிற்றிதழ்களின் நவீன படைப்புலகம்- பாராட்டுரை 

முனைவர் பெ சசிக்குமார்




தமிழ்ச் சிற்றிதழ்களின் நவீன படைப்புலகம் என்ற தங்களுடைய புத்தகத்தைப் படித்தேன். சிற்றிதழ் என்றால் என்ன என்ற சந்தேகம் புத்தகத்தின் அட்டை படத்தைப் பார்த்தது முதல் இருந்தது. அதற்குச் சரியான விளக்கம் கொடுக்கும் வகையில் அணிந்துரை தொடங்கியது. அது மட்டுமல்லாமல் தேனி சுப்பிரமணி அவர்களின் அணிந்துரை புத்தகம் என்ன பேசப் போகிறது என்ற கருத்துக்களைத் தெளிவாக எடுத்துரைத்திருந்தது. 

விளம்பரம் இருந்தால் தான் விற்க முடியும் என்ற இந்த உலகத்தில் தரமான படைப்புகள் சிற்றிதழ்களில் இருந்து மக்களைச் சென்றடையாதது வருத்தம் தான். விளம்பரத்தின் மூலம் சுமாரான திரைப்படம் சிறப்பான திரைப்படமாக மாற்றப்படுவதைப் பலமுறை பார்த்திருக்கிறோம் . கண்டு கொள்ளாத கண்களுக்கு அகப்படாத ஆனால் தரமானதாக வந்துள்ள சிற்றிலக்கியப் படைப்புகளை இந்தப் புத்தகம் கொண்டு வந்துள்ளது சிறப்பு. 

எங்கிருந்து எடுக்கப்பட்டது யார் எழுதினார்கள் என்ற தரவுகள் ஒவ்வொரு கட்டுரையின் பின்பும் இணைக்கப்பட்டுள்ளது புத்தகத்தின் சிறப்பு. சிறிய அளவில் அச்சிடப்பட்டு வெளியிடப்படும் மாத இதழ்கள் வெளியே காண்பது கடினம். அதுவும் ஒருமுறை வந்தால் எங்கே போகிறது என்று பலருக்கும் தெரியாது. புத்தக வடிவில் இப்படி வரும் பொழுது அதைச் சேமித்துப் பலமுறை படிக்க ஏதுவாக இருக்கிறது. 

இதுவரை நான் கவிதை எழுதியது இல்லை என்றாலும் புத்தகத்தில் குறிப்பிட்டு இருந்த கவிதைகள் மனதை வருடும் வகையிலும் சமுதாயப் பிரச்சனைகளைப் பேசும் வகையிலும் இருந்தது என்றால் மிகையல்ல. 

ஒரு கல்லூரி ஆய்வுக்  கட்டுரையைப் போல நல்லதொரு தலைப்பை எடுத்து ஆய்வு செய்து காணக் கிடைக்காத படைப்புகளைத் தொகுத்து அதன் பின்னே இருக்கும் கருத்துக்களையும் வழங்கியது அருமை.


புதியதொரு முயற்சிக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள்.



முனைவர் பெ சசிக்குமார் 

அறிவியல் எழுத்தாளர்

 விஞ்ஞானி இஸ்ரோ

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக