நன்றி......

வணக்கம்.என் தளத்திற்க்கு வருகை தந்தமைக்கு நன்றிகள்.கருத்திடுக.....

ஞாயிறு, 15 நவம்பர், 2020

ரசவாதியின் ரசக்கலவை

ரசவாதியின் ரசக்கலவை

நான் வெகுவிரைவில் நிலைகுலைந்து

உருமாறிப் போனாலும் போவேன்.

அந்தத் தடுமாற்றத்தில் பைத்தியக்காரனாகி எங்கோ எதையோ

இழந்தவனைப் போல் தேடித் திரிந்தாலும் திரியலாம்

 

அவ்வாறு நானிருந்தால்

கொஞ்சம் கவனித்துக் கொள்ளுங்கள்

 

யாரையும் அடிக்கவோ, கடிக்கவோ

மாட்டேன் என்று தான் நினைக்கின்றேன்.

அப்படி எதாவது செய்தால்

சும்மா விட்டு விடாதீர்கள்.

 

கை, கால்களை நன்கு கட்டி

ஆற்றிலோ, குளத்திலோ எறிந்து விடுங்கள்.

ஏன் இப்படிச் செய்கிறீர்கள்? என்று

யாராவது கேட்டால், நீங்கள் ஒன்றும் கூறாதீர்கள்.

நான் அவர்களைச் சும்மா விடுவதில்லை.

நாயாகவோ நரியாகவோ அல்லது பேயாகவோ வந்து

கை, கால்களைப் பிய்த்துச் சதைகளைக் கீறி

இரத்தம் குடிக்காமல் விடமாட்டேன்.

 

நீங்கள் எதற்கும் பயப்படாதீர்கள்

உங்களை நான் ஒன்றும் செய்திட மாட்டேன்.

 

எனக்குப் பசி வரும், அப்போது உணவில்லையெனின் கோபம் வரும்.

கோபம் வந்தால் என்ன செய்வேன் என்று எனக்கே தெரியாது.

 

எதுவும் தரவில்லையென்றாலும்

நீங்கள் எதற்கும் பயப்படாதீர்கள்.

உங்களை நான் ஒன்றும் செய்திட மாட்டேன்.

 

நீங்கள் எப்பேர்பட்ட ரசவாதி என்று தெரிந்தே

இப்போது உடனாளியாய் இருக்கின்றேன்.

 

அறியாமல் நீங்கள் சேர்மானம் கூட்டவில்லை.

அறிந்தே ரசக்கலவை ஆக்குகிறீர்கள்.

 

இன்னது இன்னதென்று தெரியாமலா

தீமூட்டிக் காய்ந்தமரம் சாய்க்கிறீர்கள்…

 

சொற்களை வைத்தேச் சோறாக்கித் தலையிலூற்றுகிறீர்கள்…

 

எனக்குத் தெரியும்… உலக தத்துவம்.

 

காற்றே குற்றவாளி.

இடியும், மழையும்

என்னாலில்லை என்கிறீர்கள்.

மேகமே… உனை வரச்சொன்னது யார்? என்கிறீர்கள்

 

இந்தப் பைத்தியத்திற்குத் தெரியும்

இடியும், மழையும் அதாகவே தான் வருமென்று.

பாரதிசந்திரன்

நன்றி  இனிது இணைய இதழ் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக